சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஓபாமாவும் இவ்வாண்டு செப்டம்பர் இறுதியில் அமெரிக்காவில் நடத்திய சந்திப்பு வெற்றி பெற்றுள்ளதால், நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டிலும், ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் இவ்விரு நாட்டு அரசுத் தலைவர்கள் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும், 20 நாடுகள் குழு உச்சி மாநாடு மற்றும் ஏபெக் கூட்டம் நடைபெறும் போது, அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக தொடர்பு கொள்ளும் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஆசிய விவகாரப் பிரிவுத் தலைவர் டெனியேல் க்ரிதேன்ப்ரீன்க் 13ஆம் நாள் வாஷிங்டனில் தெரிவித்தார்.
உலகளவில் ஏற்பட்டுள்ள அறைகூவல்களைச் சமாளிப்பதில், அமெரிக்கா சீனாவுடன் பெருமளவில் ஒத்துழைக்க பாடுபடும் அதே வேளையில், இரு தரப்புகளுக்கிடையே நிலவும் கருத்து வேற்றுமையை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.