நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் 10ஆவது உச்சி மாநாட்டில், இக்குழுவின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கு புதிய சக்தியை நாடி, வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு இலக்குகளை நனவாக்க பாடுபடுவர். இது உண்மையில் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளை அகற்றுவதை முன்னேற்றுவதாகும். சீன துணை நிதி அமைச்சர் ச்சூ குவாங் யாவ் 14ஆம் நாள் துருக்கியின் அன்தால்யா நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதை வலியுறுத்தினார்.
நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அன்தால்யா உச்சி மாநாட்டில், உலகப் பொருளாதார நிலைமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சர்வதேச நிதி மற்றும் நாணய அமைப்பு முறை சீர்திருத்தம், வர்த்தகம், எரியாற்றல், வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிய வருகிறது.