ஜி 20 குழுவின் தலைவர்களின் உச்சி மாநாடு 15ஆம் நாள் துருக்கியின் அன்தால்யா நகரில் நடைபெறத் துவங்கியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அவர் ஜி 20 குழுவின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உலகப் பொருளாதார நிலைமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சர்வதேச நிதி மற்றும் நாணய அமைப்பு முறை சீர்திருத்தம், வர்த்தகம், எரியாற்றல், வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு ஆகியவை பற்றி விவாதிப்பார்.