சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் நவம்பர் திங்கள் 15ஆம் நாள் 20 நாடுகள் குழுவின் தலைவர்களது 10வது உச்சி மாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். உலகப் பொருளாதார அதிகரிப்பை விரைவுப்படுத்துவது, 20 நாடுகள் குழுவின் முக்கிய கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஷிச்சின்பீங் 4 ஆலோசனைகளை முன்வைத்தார். ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கையின் தொடர்பு மற்றும் ஒழுங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். சீர்திருத்தப் புத்தாக்கத்தை விரைவுப்படுத்தி, வெளிநாட்டுத் திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டும். 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவது முதலியவை இதில் அடக்கம்.