பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை 15ஆம் நாள் துருக்கியின் அன்டாலியாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேகப் ஸூமா, பிரேசில் அரசுத் தலைவர் தில்மா ரோசேஃப் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பிரிக்ஸ் நாடுகளின் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி உலகம் எதிர்நோக்கும் அறைகூவலைக் கூட்டாகச் சமாளிப்பது பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
1 2