2 நாட்கள் நீடிக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 27ஆவது அமைச்சர் நிலை கூட்டம் நவம்பர் திங்கள் 17ஆம் நாள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நிறைவடைந்துள்ளது. இக்கூட்டத்துக்குப் பிறகு, பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவதற்குரிய கூட்டு நடவடிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொருளதாரா அதிகரிப்பை மேம்படுத்தும் வகையில், பிரதேசத்தின் பொருளாதாரச் சரிப்படுத்தலைத் தொடர்ந்து முன்னேற்றி, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், பிரதேசங்கள் மற்றும் உலகச் சந்தைகளில் பங்கெடுக்க உதவியளிக்க வேண்டும் என்று இக்கூட்டு நடவடிக்கை அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மனித ஆற்றல் உள்ளிட்ட மூலதனத் துறைகளின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.