ஏபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது 23ஆம் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 18ஆம் நாள் பிலிப்பைஸின் தலைநகர் மணிலாவில் துவங்கியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டுள்ளார்.
2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பிரதேச பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மனித வள வளர்ச்சி மற்றும் தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.
ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மூன்றாவது முறையாகக் கலந்து கொள்வது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 18ஆம் நாள் முற்பகல், ஏபெக் அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறைத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 19ஆம் நாள், பிரதேச மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய சிறப்பு கூட்டம், 2 கட்டங்களுடைய அதிகாரப்பூர்வமற்ற கூட்டம், நண்பகல் விருந்து ஆகியவற்றில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.