சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 22ஆம் நாள் மாலை கிழக்காசிய நாட்டுத் தலைவர்களது உச்சிமாநாட்டில் தனது பங்கேற்பை முடித்த பின், மலாகாவுக்குப் புறப்பட்டுத் தனது மலேசியா பயணத்தைத் துவங்கினார். மலாகா மாநிலத்தின் தலைவரும், முதலமைச்சரும் லீக்கெச்சியாங் தம்பதியை உற்சாகமாக வரவேற்று உரையாடினர்.
இதையடுத்து, சீனாவின் கப்பல் வழி வல்லுநர் ட்செங்ஹேயின் பண்பாட்டு மண்டபத்தை அவர்கள் பார்வையிட்டனர். உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளுடன் லீக்கெச்சியாங் கலந்துரையாடினார்.