• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் சுரங்கப்பாதை
  2015-11-24 09:31:35  cri எழுத்தின் அளவு:  A A A   
கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4499.98 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சாங் லா ஷான் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள சாலை, தற்போது உலகளவில் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழி என்ற முறையில், 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.

மொத்தம் 2400 மீட்டர் நீளமுடைய இந்தப் பாதை, சிங்காய் மாநிலத்தின் யூஷு திபெத் இனத் தன்னாட்சி சோவைச் சேர்ந்த சாதோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிங்காய் மாநில நெடுஞ்சாலையைச் சேர்ந்து, தோராமாக்கொக் இடத்திலிருந்து சாதோ மாவட்டத்துக்குச் செல்லும் 159.8 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை முழுமையாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படுவதை இப்பாதையின் கட்டுமான முடிவு குறிக்கிறது.

தோராமார்கொக்-சாதோ நெடுஞ்சாலை கட்டிமுடிக்கப்பட்டதே, யூஷு பகுதியின் பேரிடர் தடுப்பு, நெடுஞ்சாலை போக்குவரத்து, மூலப் பொருட்களின் வளர்ச்சி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிங்காய் மாநில போக்குவரத்துத் திட்டப்பணிக்கான பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040