பாரிஸ் பயங்கரவாதத்துக்குப் பிறகு, பிரான்ஸ், பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் முதலிய ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளன.
அதேவேளை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தகவலின்படி, ஐஎஸ், அல்கய்தா, பொகொ ஹராம் முதலிய பயங்கரவாத அமைப்புகள் உலகளவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் அமெரிக்க மக்கள் சர்வதேச சுற்றுலா பயணத்தில் விழிப்புணர்வுடன் பயங்கரவாத தாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.