• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியத் தலைவர்களின் கருத்து
  2015-11-27 09:16:26  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டு, பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூணும், ஆஸ்திரியத் தலைமையமைச்சர் வெர்னர் ஃபாய்மெனும் நவம்பர் 26ஆம் நாள் வியன்னாவில் தெரிவித்தனர்.

டேவிட் கேமரூண், 26ஆம் நாள் பிற்பகல் வியன்னாவைச் சென்றடைந்து, ஆஸ்திரியாவில் குறுகிய பணிப் பயணம் மேற்கொண்டார் துவங்கினார். ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு, தகவல்களைக் கூட்டாக பகிர்வது உள்ளீட்ட ஒத்துழைப்புகளை உறுப்பு நாடுகள் மேற்கொண்டு, ஐரோப்பா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் சந்திப்புக்குப்பின் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டால், பயங்கரவாதத்தைத் தடுக்கும் வாய்ப்பு உண்டு என்று வெர்னர் ஃபாய்மென் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040