பெல்ஜியம் நாட்டின் தேசிய பாதுகாப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்கான எச்சரிக்கை நிலை குறைக்கப்பட்ட பின், பொது போக்குவரத்து, வணிகச் செயல்பாடு முதலியவற்றின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் புதிய நடவடிக்கைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பெல்ஜியம் முழுவதும் பாதுகாப்புக்கான எச்சரிக்கை 3ஆவது நிலையில் உள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் நிகழ வாய்ப்புள்ளது என்பதை இது காட்டுகிறது.