4வது சிரியாவுக்கான மனித நேய உதவிக் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிப்ரவரி 4-ஆம் நாள் கலந்துக்கொண்ட பின், செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நிரலை அவர் மாற்றம் செய்து, இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். சர்வதேச சமூகம் அக்கறை செலுத்தும் முக்கிய பிரச்சினைகளைச் சமாளிப்பதில் பங்கேற்காமல் சீன எப்போதும் இருக்க போவதில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இதனிடையில், பிற நாடுகளின் உதவிகள், தற்காலிக இன்னல்களைத் தளர்த்துவதற்கு துணைபுரியும். மனித நேய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, சிரியாவின் நீண்டகால அமைதியை நனவாக்குவது தான் அடிப்படை வழிமுறையாகும் என்றும் வாங் யீ தெரிவித்துள்ளார்.