கசகஸ்தான் அரசுத் தலைவர் நசர்பயேவும், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் 9ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். இரு நாட்டுறவின் வளர்ச்சி பற்றியும், இரு தரப்பும் அக்கறை கொண்டுள்ள சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று கசகஸ்தான் அரசுத் தலைவர் மாளிகையின் செய்தி அலுவலகம் அன்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
தவிர, ரஷிய-உக்ரைன் உறவின் நிகழ்வு நிலை மற்றும் மின்ஸ்க் உடன்படிக்கையின் நடைமுறையாக்கம் குறித்து நசர்பயேவும், புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ரஷிய-துருக்கி உறவு பதற்ற நிலையில் சிக்கியுள்ளதற்கு துருக்கியே காரணமாகும் என்றும், இரு நாட்டுறவு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு துருக்கி உகந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதின் தெரிவித்தார்.