ஏவு ஊர்தி மூலம் குவாங்மியோங்சொங்-4 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் வட கொரியா செலுத்தியுள்ளது என்று வட கொரியத் தேசிய விண்வெளி வளர்ச்சி ஆணையம் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கீயுன் ஹுய் அம்மையார், ஜப்பானிய தலைமையமைச்சர் ஷின்சோ அன்பே ஆகியோர் 9ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். வட கொரியா மீது மேலும் கடுமையான தடை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு ஐ.நா பாதுகாப்பவையை வற்புறுத்தும் வகையில், இம்முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிடையேயான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க மூப்படை தளபதி குழுவின் தலைவர் ஜோசேப் ஃப் துன்ஃபோர்த் இந்த வாரத்துக்குள் ஹாவாயில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பிரமுகர்களுடன் விவாதம் நடத்துவார் என்று அமெரிக்க அரசு 9ஆம் நாள் உறுதிப்படுத்தியது.