ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் 9ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யுன் பியுங் சேவைச் சந்தித்து பேசினார். அண்மையில் வட கொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனை மற்றும் செயற்கை கோள் செலுத்தியது குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வட கொரியாவின் மேற்கூறிய செயல்கள், நிதானத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். அவை, ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானத்தை அத்துமீறியுள்ளன என்றும், பிரதேச நிலைத்தன்மை, படைக்கலக் குறைப்பு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு இலக்கு ஆகியவற்றுக்கு இச்செயல்களால் ஏற்படும் சாதகமற்ற பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் பான் கீ மூன் சந்திப்பின் போது தெரிவித்ததாக ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.