போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 22 முதல் 25ஆம் நாள் வரை சீனாவின் ஹாய்நான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிய பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையான இந்த மன்றம், ஆசியப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கை முன்னேற்றும் என்று வெளிநாட்டு அரசியல் துறையினர்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரதேச செழுமையுடன் தொடர்புடைய அறைகூவல்களை விவாதிப்பதற்கு, நடப்பு மன்றம் முக்கிய பங்காற்றும் என்று நேபாளத் தலைமையமைச்சர் காட்கா பிரசாத் ஷர்மா ஒளி தெரிவித்தார்.