• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்-1
  2016-04-13 15:25:28  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீனக் கடல் பிரச்சினையை நடுவர் நீதிமன்றத்தில், 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் அமெரிக்காவின் வழக்கறிஞர் குழு ஒன்று இவ்வழக்கின் முழு விசாரணையிலும் பங்கெடுத்தது. ஜப்பானைச் சேர்ந்த ஷுன்ஜி யனாய், சர்வதேச கடல் சட்ட மன்றத்தின் தலைவராக ஆக்கமுடன் இவ்வழக்கிலும் கலந்து கொண்டார். ஆனால், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் கிழக்கு சீனக் கடல் மீதான அரசுரிமை மற்றும் எல்லை வகுத்தல் தொடர்பான சர்ச்சையை அவர் பொருட்படுத்தவில்லை. பிலிப்பைன்ஸின் செயல்பாட்டில் மேலை நாடுகளின் தலைமைப் பங்கு நாளுக்கு நாள் தெளிவாகி வருவதை இதன் மூலம் காணலாம்.

உண்மையிலே, 2ஆவது உலகப் போருக்கு பிந்தைய ஒரு நீண்டகாலத்தில், தென் சீனக் கடல் மீதான சீனாவின் அரசுரிமைக்கும் தொடர்புடைய உரிமை நலன்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்தின் பொது ஒப்புதல் கிடைத்தது. அமெரிக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிலப்படம் மற்றும் புத்தகங்களில், எடுத்துக்காட்டாக 1961ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லிபின்காட்ஸ் கெஜட்டீர் ஆப் த வோல்ட்(LIPPINCOTT'S GAZETTEER OF THE WORLD), 1971ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக நாடுகளின் நிர்வாகப் பிரிவு களஞ்சியம் உள்ளிட்டவற்றில், தென் சீனக் கடலிலுள்ள பல்வேறு தீவுகள் மீதான சீனாவின் அரசுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1952ஆம் ஆண்டு ஜப்பான் வெளியிட்ட வரையறையான உலக நிலப்படத் தொகுதியிலும், 1972ஆம் ஆண்டில் வெளியிட்ட உலக ஆண்டு நூலிலும் சீனாவின் இந்த அரசுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040