முசுடான் எனும் மத்திய தூர ஏவுகணையை வட கொரியா 28ஆம் நாள் பிற்பகல் மீண்டும் சோதனை முறையில் செலுத்தியது. ஆனால் இச்செலுத்தல் வெற்றி பெறவில்லை என்று கருதப்படுவதாக தென் கொரிய யுன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வட கொரியா ஏவுகணையை மீண்டும் செலுத்தியது கவலை அளிப்பதாக உள்ளது என்று ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீஃபென் துயாரிக் 28ஆம் நாள் தெரிவித்தார். வட கொரியா ஆத்திரமூட்டல் நடவடிக்கையை நிறுத்தி, தன் சர்வதேச கடமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.