• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட இந்தியாவில் தீ விபத்து
  2016-05-03 11:23:13  cri எழுத்தின் அளவு:  A A A   
வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காட்டில் நிகழ்ந்த கடும் தீ விபத்தில் இதுவரை குறைந்தது 7 பேர் இவ்விபத்தினால் உயிரிழந்தனர். புலிக்கான 2 இயற்கை புகலிடங்களுக்கும் இந்த தீ விபத்து அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று இந்திய அதிகார வட்டாரம் 2ஆம் நாள் தெரிவித்தது.

சில மாதங்களாக தொடர்ந்த இந்த காட்டுத் தீயை அணைக்கும் வகையில், கடந்த வார இறுதியில் இந்திய அரசு இராணுவ ஹெலிகப்டர் அனுப்பியுள்ளது. செயற்கைக் கோள் அனுப்பிய படத்தின்படி, 70 விழுக்காடு தீ அணைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயால் கழிவுப் பொருட்களை அகற்ற தீ வைத்த்தே காட்டில் தீ விபத்து ஏற்படக் காரணமாக அமைந்தது. தீ வைத்த 4 பேர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் 2ஆம் நாள் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040