தில்லியில் கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் எண்ணியல் தொடர்பான மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தென் ஆப்பிரிக்காவின் சிந்தனையகத்தைச் சேர்ந்த உறுப்பினர் சாண்டிஸோ நகோபோ திங்கள்கிழமை தெரிவித்தார்.
இணையப் பயன்பாடு மற்றும் திறமைகளை பகிர்ந்து கொள்வதில் உள்ள பிரச்னைகளில் தீர்ப்பதற்கான தீர்வுமுறையை பிரிக்ஸ் சிந்தனையைகம் கண்டறிந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் கலாசாரம், அரசியல், பொருளாதார பின்னணி உள்ளிட்ட பல காரணிகளில் மாறுபாடு கொண்டிருந்தாலும் முக்கியமான பிரச்னையில் பொதுவான ஒரு தீர்வுமுறை கண்டறியப்பட்டுள்ளது என்று ஸின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நகோபோ தெரிவித்தார்.
சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இணையத்தை எப்படி பயன்படுத்துவது என நாங்கள் ஆலோசித்து, ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.