பாகிஸ்தான் தலைமை அமைச்சரின் வெளி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை அளிக்கும் சிறப்பு உதவியாளர் சையது தாரிக் பதேமி, அமெரிக்க பிரிதிநிதிகளிடம் இஸ்லாமாபாதில் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து பாகிஸதான் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில், அமெரிக்க பிரதிநிதிகளுடன் முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் போதிய ஆதரவின்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
எப்-16 ரக ஜெட் விமானங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நிதியை அமெரிக்கா நிறுத்தியது. அதன்பின் பாகிஸ்தான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்படத்தக்கது.