• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கை அரசுத் தலைவர் பிரிட்டன், இந்திய பயணம்
  2016-05-06 10:37:49  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணம், அடுத்த வாரம் தொடங்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வரும் 11-ம் தேதி பயணம் மேற்கொள்ளும் சிறிசேனா, அந்நாட்டு அரசு நடத்தும் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரிட்டன் பயணத்தைத் தொடர்ந்து, 13ஆம் தேதி இந்தியாவில் பயணிக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஹிந்து பண்டிகையை இந்திய தலைமை அமைச்சர் மோடி தொடங்கி வைக்கிறார். இப்பண்டிகையில் சிறிசேனா பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040