பிரிட்டனில் வரும் 11-ம் தேதி பயணம் மேற்கொள்ளும் சிறிசேனா, அந்நாட்டு அரசு நடத்தும் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரிட்டன் பயணத்தைத் தொடர்ந்து, 13ஆம் தேதி இந்தியாவில் பயணிக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஹிந்து பண்டிகையை இந்திய தலைமை அமைச்சர் மோடி தொடங்கி வைக்கிறார். இப்பண்டிகையில் சிறிசேனா பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.