1951ஆம் ஆண்டு மே 23ஆம் நாள், சீன நடுவண் அரசு திபெத் உள்ளூர் அரசுடன், அமைதியான முறையில் திபெத்தினை விடுதலை பெறுவதற்கான 17 விதிகளுடைய உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன் மூலம் திபெத் அமைதியான விடுமுறையைப் பெற்று, இருண்ட, பின்தங்கிய மற்றும் வறுமையான நிலையிலிருந்து, ஒளிவீசும், முன்னேறிய மற்றும் வளமிக்க புதிய காலத்தில் நுழைந்து வளரத் தொடங்கியது.
விடுதலைக்குப் பின், 1959ஆம் ஆண்டில் திபெத்திலுள்ள பண்ணை அடிமைகள் ஜனநாயக சீர்திருத்த இயக்கத்தில் ஈடுபட்டு, அரசியல் மதத்துடன் இணையும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையை அகற்றினர். 1965ஆம் ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசம் உருவாக்கப்பட்டு, அங்குள்ள பல்வேறு இன மக்கள் உண்மையான நில உரிமையாளராக மாறினர்.
கடந்த 65 ஆண்டுகளில், நடுவண் அரசு மற்றும் முழு நாட்டு மக்களின் ஆதரவுகளுடன், திபெத்திலுள்ள பல்வேறு இன மக்கள், வளமான வாழ்க்கையை உருவாக்க வேண்டிய பேரூக்கத்தை வெளிக்காட்டி, பல்வேறு துறைகளில் உலகின் கவனத்தை ஈர்க்கும் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர். உலகின் கூரையாம் திபெத், விறுவிறுப்பாக வளரும் பிரதேசமாக புதிய தோற்றத்தை அளித்து வருகிறது.