• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தை
  2016-05-23 17:49:26  cri எழுத்தின் அளவு:  A A A   
நேர்மை, நியாயம் மற்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை மூலம், சீன-இந்திய எல்லை பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென இந்தியா விருப்பம் தெரிவிப்பதாக இந்திய அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். எல்லை பிரச்சினை தீர்வு கட்டுகோப்பு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தும் வகையில், இந்தியாவுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹொச்சுன் யீங் அம்மையார் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பும் எல்லை பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, சர்ச்சையை கையாண்டு, எல்லை பிரதேசத்தின் அமைதி பாதுகாப்பை பேணிக்காத்து வருகின்றன. சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சிக்கு இது சாதகமான நிலைமையை வழங்கி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040