மே 14ஆம் நாள் முதல், கடும் காற்று மற்றும் பலத்த மழை நாடு முழுவதிலும் இலங்கையைத் தாக்கியது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற சீற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இவற்றில், 92 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும், பாதிக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் மக்கள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்று இலங்கை பேரிடர் நிர்வாக மையம் 23ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடலோரப் பகுதிகளில் வரும் நாட்களில் கடும் காற்று தொடரும் என்றும் பல இடங்களில் பலத்த மழை பொழிவு ஏற்படக் கூடும் என்றும் இந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட புதிய முன்னறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.