• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான்-இந்திய ஒத்துழைப்பு
  2016-05-24 08:52:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் ஈரான் அரசுத் தலைவர் ஹசான் ரௌஹானி 23ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு ஒத்துழைப்பு பற்றி ருஹானி மோடியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எரியாற்றல், அடிப்படை வசதி கட்டுமானம், பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு தொடர்பாக 12 புரிந்துணர்வு குறிப்பாணைகள் எட்டப்பட்டன என்று ஈரான் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.

மேலும், அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தூதாண்மை தொடர்பை அதிகரிக்க இருநாடுகளும் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040