அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா மே 23ஆம் நாள் முதல் 25ஆம் நாள் வரை வியட்நாம் நாட்டில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பராக் ஒபாமா, வியட்நாம்-அமெரிக்க உறவு இயல்பான நிலைக்கு திரும்பிய பிறகு அந்நாட்டில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட 3வது அமெரிக்க அரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், வியட்நாம் அரசுத் தலைவர் த்ரான் டாய் குவாங் பேசுகையில், வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பும் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். அப்போது ஒபாமா கூறுகையில், வியட்நாம் மீதான ஆயுத விற்பனை தடையாணையை அமெரிக்கா முழுமையாக நீக்கும் என்று தெரிவித்தார்.
24ஆம் நாள் ஒபாமா ஹோ ச்சி மின் நகரில் பயணம் மேற்கொண்டார்.