முதலாவது உலக மனித நேய உச்சி மாநாடு 24ஆம் நாள் துருக்கியின் இஸ்தான்ஃபூரில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் மொத்தமாக 1500 வாக்குறுதிகளை அளித்துள்ளன என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், மோதல்கள் நிகழாமல் தடுக்கவும் அவற்றை தீர்க்கவும் பாடுபட்டு, பொது மக்களை மேலும் உறுதியாக பாதுகாத்து, மனித நேய இலட்சியத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.