பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியலிலிருந்து விலகுவது அல்லது தொடர்ந்து இருப்பது குறித்த பொது வாக்கெடுப்பு 23ஆம் நாள் நடைபெறத் துவங்கியது. பிரிட்டனின் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் காலை 7 மணி முதல் வாக்களிக்க துவங்கினர்.
பிரிட்டன் தேர்தல் ஆணையம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, சுமார் 4 கோடியே 65 லட்சம் மக்கள் இப்பொது வாக்கெடுப்பில் கலந்து கொள்வர்.
வாக்கெடுப்பு முடிவு உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் முற்பகல் வெளியிடப்படக்கூடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.