• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடகொரியாவின் எறிவிசை ஏவுகணை சோதனைக்கு ஐ.நா பாதுகாப்பவை கண்டனம்
  2016-06-24 09:29:47  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் வடகொரியா தரையிலிருந்து தரைக்குச் செல்லும் எறிவிசை ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் 23ஆம் நாள் அறிவித்தது. ஆனால், இந்த ஏவுகணையை ஏவிய இடம் மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை.

ஐ.நா பாதுகாப்பவை 23ஆம் நாள் வடகொரியாவின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானங்களைப் பின்பற்றுமாறு ஐ.நா பாதுகாப்பவை வடகொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது.

மேலும் இந்த சோதனை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசூன்யீங் அம்மையார் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் கருத்து தெரிவிக்கையில், ஐ.நாவின் தீர்மானத்தில் இது குறித்த தெளிவான விதி உண்டு என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040