ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் இயக்குநர் குழுவின் 16ஆவது கூட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஷீ ச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 15 ஆண்டுகளில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது. ஒன்றுக்கொன்று நம்பிக்கையும் நலனும் தருவது, சமத்துவம், கலந்தாய்வு, பலதரப்பட்ட நாகரீகங்களை மதிப்பது, கூட்டு வளர்ச்சியை நாடுவது ஆகியவை ஒன்றிணைந்த "ஷாங்காய் எழுச்சியை" முன்மொழிந்து, செயல்படுத்தியுள்ளது என்று ஷீ ச்சின்பிங் தன் உரையில் தெரிவித்தார். எதிர்காலத்தில், இவ்வமைப்பின் வளர்ச்சி குறித்து அவர் ஐந்து அம்ச யோசனைகளை முன்மொழிந்தார்.
ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சுமுகமான அண்டை நாட்டு நட்புறவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அமைதியைப் பேணிகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தி, சமத்துவம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய உறவை வலுப்படுத்த பாடுபட்டு, பல்வேறு துறைகளில் பயன்மிக்க ஒத்துழைப்பை ஆழமாக்கி, இப்பிரதேசத்தின் பாதுகாப்பு, நிதானம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கு பங்காற்ற வேண்டும் என்று பல்வேறு நாட்டு அரசுத் தலைவர்கள் இக்கூட்டத்தில் குறிப்பிட்டனர்.