• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாஷ்கண்ட் உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட ஒத்த கருத்து
  2016-06-25 15:03:36  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தாஷ்கண்ட் உச்சி மாநாட்டில், தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து ஒத்த கருத்து எட்டப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 24ஆம் நாள் வெளியிட்ட அதன் 15ஆவது ஆண்டு நிறைவுக்கான தாஷ்கண்ட் அறிக்கையில் இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென் சீனக் கடல் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு தாஷ்கண்ட் அறிக்கை ஆதரவளித்துள்ளது.

கடல் சட்டம் பற்றிய ஐ.நா. பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கடல் சட்ட ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும். அனைத்து சர்ச்சைகளும் தொடர்புடைய தரப்புகளால் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் தாஷ்கண்ட் அரிக்கையில் உறுதி செய்துள்ளன.

மேலும், புதிய உறுப்பு நாடாக மாறியுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இவ்வமைப்பின் உள்ளார்ந்த ஆற்றலை விரிவாக்கி, சர்வதேச சமூகத்தில் இவ்வமைப்பின் பங்கினையும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் இந்த உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040