ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை பன்னாடுகள் கூட்டாக ஒடுக்குவதில் ஈரான் ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி 29ஆம் நாள் தெரிவித்தார். அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் நடைபெற்ற அஸ்பேன் புது கருத்து திருவிழாவில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சில பிரச்சினைகள் இன்னமும் நிலவுகின்றன. இப்பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்கா பாடுபட்டு வருகிறது. ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவது, ஈரானின் மையக் கடமையாகும் என்பது மறுக்கப்பட முடியாதது. ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவதில் அமெரிக்காவும், ஈரானும் பொது நலன்களைக் கொண்டுள்ளன என்று கெர்ரி தெரிவித்தார்.