ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு 29ஆம் நாள் நடைபெற்றது. இதில் பிரிட்டன் தலைமை அமைச்சர் டேவிட் கேமருன் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறைகள் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.