• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா : நடுத்தர ரக ஏவுகணை சோதனை வெற்றி
  2016-06-30 17:12:16  cri எழுத்தின் அளவு:  A A A   
தரையிலிருந்து விண்ணில் பறந்து தாக்கும் புதிய நடுத்தர ரக ஏவுகணை சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாகச் செய்து முடித்த்து.

ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திட்டமிடப்பட்ட இலக்குகளை ஏவுகணை நிறைவேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

70 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை, இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா தயார் செய்துள்ளது. இந்த ஏவுகணை, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் இணைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 100 ஏவுகணைகள் இந்தியாவில் தயார் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040