• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் சர்ச்சை
  2016-07-15 15:29:20  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், தென் சீனக் கடல் சர்ச்சை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தில்சட்டத்திற்குப் புறம்பான இறுதி தீர்ப்பை இம்மன்றம் வழங்கியுள்ளது. இது குறித்து, சீனாவின் நிலைப்பாடுகளை சீன அரசவை உறுப்பினர் யாங்ச்சேச்சு 14ஆம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.


சட்டம் என்ற சாக்குப்போக்கில், இவ்வங்கின் தீர்ப்பில் எப்போதும் கேலிக்கூத்து அரங்கேற்றட்டிருக்கிறது. இதனால், தென் சீனக் கடல் இறையாண்மையையும் கடல் நலன்களையும் பேணிக்காக்கும் சீனாவின் மன உறுதி எப்போது மாறப்போவதில்லை. தொடர்புடைய நாடுகளுடன் சேர்ந்து, உண்மையை மதிப்பது என்ற அடிப்படையில், பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களின் வழி, பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சையை உரிய முறையில் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


பிலிப்பைன் அரசின் ஒரு சார்பு உடையதாக, இவ்வழக்கு வழங்குகிறது. இச்செயல், சர்வதேசச் சட்டத்தை மீமிய ஒன்றாகும். இதில் கூறப்படும் தீர்ப்பு உண்மையில் சட்டத்திற்குப் புறம்பானது. இதனால், பலன் ஏதுமில்லை என்று சீன அரசவை உறுப்பினர் யாங்ச்சேச்சு சுட்டிகாட்டினார். அவர் கூறியதாவது

கடந்த பல ஆண்டுகளில், பேச்சுவார்த்தையின் மூலம், தென் சீனக் கடல் பற்றிய சர்ச்சையைத் தீர்ப்பது பற்றி, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸூக்குமிடையில் உருவாக்கப்பட்ட தொடர்புடைய இரு தரப்பு உடன்படிக்கையை பிலிப்பைன் அரசு இவ்விழக்கின் மூலம் மீறியுள்ளது. 2002ஆம் ஆண்டின் போது, பிலிப்பைன் உள்ளிட்ட ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து சீனா கையொப்பமிட்டுள்ள தென் சீன கடல் தொடர்புடைய தரப்புகளின் செயல் அறிக்கையும் இதில் அடக்கம். இச்செயல், சர்வதேசச் சட்டத்திற்கும் இவ்வறிக்கைக்கும் புறம்ப்பானது. இத்தீர்ப்பு எப்போதும் சட்டவிரோதமானது. இத்தீர்ப்பு, சர்வதேசச் சட்டத்திற்குப் பொருத்தமற்றது என்றார் அவர்.


இதனால், தென் சீன கடல் இறையாண்மை மற்றும் கடல் நலனைப் பேணிக்காக்கும் சீனாவின் மன உறுதி மாறப் போவதில்லை. சீன அரசும் சீன மக்களும் ஒன்றுபட்டு, பயனுள்ள நடவடிக்கைகளை நடமுறைப்படுத்தி, சீனாவுக்குரிய உரிமை பிரதேசத்தையும், கடல் பரப்பையும் உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும். பிலிப்பைன் அரசின் செயல், பிற நாடுகள், தென் சீன கடல் பிரச்சினையில் தலையிடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் உள்ளது. தென் சீன கடல் பிரச்சினைஸ் என்பது இக்கடலோரத்தில் உள்ள, இக்குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நாடுகளுக்கிடையில் பிரச்சனையாகும். அமைதியான வழிமுறை அதாவது பேச்சுவார்த்தையின் மூலம் இந்த சர்ச்சையைத் தீர்க்க வேண்டும். என்று யாங்ச்சேச்சு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040