• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்
  2016-07-24 13:57:38  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 23ஆம் நாள் நண்பகல், குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. இது வரை குறைந்தது 61 பேர் உயிரிழந்தனர், சுமார் 200 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் எனும் தீவிரவாத அமைப்பு அறிவித்தது.

இத்தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

கடந்த சில ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகமாக இருந்துள்ளன. ஆனால், அப்பாவி மக்களுக்கு எதிரான இத்தகைய பெரிய உயிரிழப்பு போன்ற தாக்குதல் அரியதானது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040