ஈராக்கிற்கான ஐ.நா. உதவிக் குழுவின் பணிக்காலம் மீண்டும் ஓராண்டு நீடிக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்பவை 25ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. அத்துடன், ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் ஈராக்கின் பாதுகாப்புக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தல் குறித்தும் ஐ.நா. பாதுகாப்பவை கவலை தெரிவித்தது.
ஈராக்கிற்கான ஐ.நா. உதவிக் குழுவின் பணிக்காலம் 2017ஆம் ஆண்டு ஜுலை 31ஆம் தேதி வரை நீடிப்பதாகவும், ஐ.நாவின் பல்வேறு உறுப்பு நாடுகளும் இவ்வுதவிக் குழுவுக்கு நன்கொடை மற்றும் ஆதரவுகளை வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் ஐ.நா. பாதுகாப்பவை தெரிவித்துள்ளது.