ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஊடக துறை ஒத்துழைப்புக் கருத்தரங்கின் 2016ஆம் ஆண்டுக் கூட்டம், 26ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. 101 நாடுகளைச் சேர்ந்த 212 ஊடக நிறுவனங்கள் பங்கேற்று, பொதுவான எதிர்காலத்தில் புதிய ஒத்துழைப்பு வரைப்படம் என்ற கூட்டத்தின் தலைப்பில் விவாதம் நடத்தி வருகின்றன.
இந்த ஊடக ஒத்துழைப்பு கருத்தரங்கு, பன்னாட்டு செய்தி ஊடகங்களுக்கிடையே உரையாடல், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு அரங்கம் ஒன்றை வழங்கியுள்ளது. அதை நல்ல வாய்ப்பாக கொண்டு, நாட்டுறவின் வளர்ச்சியை முன்னெடுப்பது, மக்களிடையே தொடர்பை அதிகரிப்பது, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்காக, பல்வேறு நாடுகளின் ஊடக நிறுவனங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் விருப்பம் தெரிவித்தார்.