• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸ் நாட்டின் தேவாலயத்தில் பிணைக்கைதிகளைக் கடத்திய சம்பவம்
  2016-07-26 19:38:26  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரான்ஸ் நாட்டின் வடக்கிலுள்ள சேனி-மரிடைம் மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் 26ஆம் நாள் பிணைக்கைதிகள் கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலையில் இந்த மாநிலத் தலைநகர் ரூயின் நகருக்கு அருகிலுள்ள தேவாலயத்தில் புகுந்து ஆண் இருவர் கத்தியைக் கொண்டு 5 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பிணைக்கைதிகளை பிடித்த இருவரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

கடத்தல்காரன்களின் தகவல் மற்றும் அவர்களின் நோக்கம் பற்றி தெரியவில்லை. பிரான்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு வாரியம் இச்சம்பவத்தை விசாரணை செய்து வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040