• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜம்மு-காஷ்மீரில் தொடரும் போராட்டம்
  2016-07-27 10:42:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும், பிரிவினைவாதிகளின் அச்சறுத்தலினால் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.

ஸ்ரீநகரில் மக்கள் இயல்பாக நடமாடும் வகையில் துணை ராணுவப்படை மற்றும் ராணுவத்தினர் சாலைகளிலிருந்து திரும்பினர். இதனைத் தொடர்ந்து, நகரின் சில பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040