2016ஆம் ஆண்டுக்கான 20 நாடுகள் குழுவின் இளைஞர் கூட்டம் 27ஆம் நாள் முற்பகல் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது.
20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தின் தலைப்பு, பொது நோக்கத்துக்கான இளைஞரின் புதுமையாக்கம் ஆகும்.
கூட்டத்தின் போது, வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி, புத்தாக்க சிந்தனை மற்றும் தொழில் நடத்தும் நடைமுறை, சமூக நீதி மற்றும் சம உரிமை நலன்கள், பசுமை வாழ்க்கை மற்றும் தொடரவல்ல வளர்ச்சி, கூட்டுறவு மற்றும் உலகப் பொருளாதாரக் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதம் நடத்த உள்ளனர். இறுதியில் உருவாக்கப்படும் அறிக்கை 2016ஆம் ஆண்டு ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழுவிடம் வழங்கப்படும்.