• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பான் சுய மதிப்பீடு செய்ய வேண்டும்:சீனா
  2016-07-29 09:57:42  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீனக் கடல் பிரச்சினையில், ஜப்பான் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். சிறுபான்மையாக ஏன் மாறுகிறோம் என்று ஜப்பான் உணர்வுப்பூர்வமாக மீளாய்வு செய்ய வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 28ஆம் நாள் தெரிவித்தார்.

தற்போது 80க்கும் அதிகமான நாடுகள் மற்றும் அமைப்புகள் சீனாவின் நிலைப்பாட்டை உணர்ந்து கொண்டு ஆதரவ்வு தெரிவித்துள்ளன. 2, 3 நாடுகள் மட்டுமே, தென் சீனக் கடல் பிரச்சினைக்கான நடுவர் தீர்ப்பு சர்வதேச சட்டத்துக்குப் பொருந்தியது என்று தெரிவித்துள்ளன. இந்த நாடுகள் பெரும்பாலான நாடுகளின் நியாயமான நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஜப்பான் தரப்பும் சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு உண்மையாக மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் லு காங் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040