• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜப்பானிய உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தை
  2016-08-26 16:26:16  cri எழுத்தின் அளவு:  A A A   

மூன்றாவது சீன-ஜப்பானிய உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தைக்கு சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ட்சுவும் ஜப்பானியத் தேசியப் பாதுகாப்பு உத்தரவாத அலுவலகத் தலைவர் யாட்சி சியோதரோ 25ஆம் நாள் பெய்ஜிங்கில் கூட்டாக தலைமை தாங்கினர்.

தற்போது சீன-ஜப்பானிய உறவின் மேம்பாட்டுப் போக்கு தென் சீனக் கடல் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.  இது இரு தரப்புகளின் நலன்களுக்குப் புறம்பானது என்று யாங் ஜியே ட்சு தெரிவித்தார். சீனாவுடனான ஆக்கப்பூர்வமான, நட்பார்ந்த கொள்கையைப் பயன்தரும் முறையில் கடைப்பிடித்து, இரு நாட்டுறவின் மேம்பாட்டுக்குச் சாதகமான நிலைமையை ஜப்பான் உருவாக்க வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய-சீன உறவை மேம்படுத்தி வளர்க்க ஜப்பான் விரும்புகிறது. சீனாவுடன் இணைந்து தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, இரு நாட்டுறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து, நிதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் விரும்புவதாக யாட்சி சியோதரோ தெரிவித்தார். ஜி 20 உச்சி மாநாட்டை சீனா நடத்துவதை ஜப்பான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040