கெர்ரி அன்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரொவுடன் சிரியா பிரச்சினை குறித்து தொடர்ந்து 10 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கெர்ரி பேசுகையில், வரும் சில நாட்களில் அமெரிக்கா மற்றும் ரஷியாவின் நிபுணர்கள் ஜெனீவாவில் தங்கி, குறிப்பிட்ட விபரங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பர் என்று கூறினார்.
லாவ்ரோவ் பேசுகையில், கெர்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், சிரியா பிரச்சினையில் இருதரப்புகளின் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிக்க இது துணைபுரியும் என்றும் தெரிவித்தார்.