பன்முக முறையில் சீர்திருத்தங்களை ஆழமாக்கவும், மேலும் சீரான வளர்ச்சி எதிர்காலத்தை திறக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். சீனாவின் சீர்திருத்தம் தெளிவானது மாறாது. சீனாவின் சீர்திருத்தப் போக்கு உறுதியாக முன்னேறி உள்ளது. அது நிறுத்தப்படாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறினார். அவர் ஹாங்சோவில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் உரைநிகழ்த்திபோது இதைத் தெரிவித்தார்.
மேலும், சீனாவில் வெளிநாட்டுத் திறப்பு இலட்சியம், தனியாக வளர்வது அல்ல. மாறாக, பல்வேறு தரப்புகளும் இதில் பங்கேற்பதை வரவேற்பதாகவும், பல்வேறு நாடுகளும் கூட்டாக வளர்ந்து வருவதை ஆதரிப்பதாகவும் பல்வேறு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் அரங்கத்தை தொடங்குவதாகவும் ஷி ச்சின்பிங் தனது உரையில் கூறினார்.