• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு
  2016-09-04 13:40:09  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு 4ஆம் நாள் காலை ஹாங்சோ நகரில் நடைபெற்றது. சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பீங், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் சூமா, பிரேசில் அரசுத்தலைவர் மிஷெல் தெமேர், ரஷிய அரசுத்தலைவர் விளாடிமிர் புதின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஷிச்சின்பீங் உரை நிகழ்த்திய பேசுகையில், பிரிக்ஸ் நாடுகள் புதிதாக சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைமை ஆற்றலாகவும் 20 நாடுகள் குழுமத்தின் முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியுடனும், தலைவர் நாடான இந்தியாவின் பெரியம் ஊக்கத்துடனும் பிரிக்ஸ் நாடுகளிடை ஒத்துழைப்பு சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி வருகிறது. நடப்பு அதிகாரப்பூர்வ மற்ற சந்திப்பு நிறைய சாதனைகளைப் பெற்று, ஒரு மாதத்துக்குப் பின் கோவாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் 8ஆவது சந்திப்புக்கு அடிப்படையை இட்டுள்ளதாக ஷிச்சின்பீங் எதிர்ப்பார்ப்பைத் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஷிச்சின்பீங் 4 ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

முதலாவது, அதிகரிப்பு வழிமுறையை கூட்டாக புத்தாக்கம் செய்ய வேண்டும்.

2ஆவது, உலக ஆட்சிமுறையை கூட்டாக முழுமைப்படுத்த வேண்டும்.

3ஆவது, சர்வதேச நீதி மற்றும் நேர்மையை கூட்டாக பேணிக்காக்க வேண்டும்.

4ஆவது, சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை கூட்டாக முன்னேற்றி, தொடரவல்ல வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ள வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் சிறப்பான அதிகரிப்பு போக்கை நிலைநிறுத்தி வருகின்றது. முழு உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய ஆற்றலை இது தொடர்ந்து வெளிக்கொணரும் என்று இச்சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040