• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது சந்திப்பு பற்றிய செய்தியறிக்கை
  2016-09-04 15:50:06  cri எழுத்தின் அளவு:  A A A   
4ஆம் நாள் ஜி20 ஹாங்சோ உச்சி மாநாட்டின் போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்தினர். அதற்குப் பிறகு, இந்த சந்திப்பு பற்றிய ஒரு செய்தியறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

உலக அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக நிர்வாகம் முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி அவர்கள் பரந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்று செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக பொருளாதார அதிகரிப்பு, பிரிக்ஸ் நாடுகளின் தத்தமது பொருளாதார வளர்ச்சி ஆகியவை, புதிய அறைகூவல்களை எதிர்நோக்குகின்றன. ஆனால், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பின் எதிர்காலம் மற்றும் உந்து ஆற்றல் இன்னும் உள்ளது. அது, உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய இயக்கு ஆற்றலாகும் என்று அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

திறப்பு, ஒற்றுமை, சமத்துவம், புரிந்துணர்வு, ஒன்றுக்கு ஒன்று நலன்தரும் ஒத்துழைப்பு முதலிய கோட்பாடுகளுடன், பிரிக்ஸ் நாடுகள் நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040