சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் திங்கள் 4ஆம் நாள், 20 நாடுகள் குழுவின் ஹாங் சோ உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். 2016ஆம் ஆண்டு, 20 நாடுகள் குழுவின் நிகழ்ச்சி நிரலின் முக்கிய இடத்தில் வளர்ச்சி வைக்கப்பட வேண்டும். 2030ஆம் ஆண்டில் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் பற்றிய நடவடிக்கைத் திட்டம் கூட்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வகுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.